Skip to content
1147

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய்.

குறள் 1147

Ooravar Kelavai Eruvaaka Annaisol Neeraaka Neelumin Noi.

பொருள்

ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.

English

My anguish grows apace: the town's report Manures it; my mother's word doth water it.

இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்