திருக்குறள்

1147.

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய்.

திருக்குறள் 1147

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய்.

பொருள்:

ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.

மு.வரததாசனார் உரை:

இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:

இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.